A Learning Experience - Foreword
அளந்தோம், அறிந்தோம் – சில கோயில்கள்
For a picture version of this post, go
here.
வெள்ளிக்கிழமை, செப்டெம்பர் 15, 2003.
சென்னை நண்பர்களான நாங்கள் (ஐந்து பேர் கொண்ட குழு), திருச்சிராப்பள்ளி செல்லும் பொருட்டு, சுமார் ஏழேமுக்காலுக்கு ஈரோடு எக்ஸ்ப்ரெஸ்ஸில் ஏறி அமர்ந்தோம்.
திருச்சிராப்பள்ளியின் ‘மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய’த்தைச் சேர்ந்த டாக்டர். இரா. கலைக்கோவன், திருச்சிராப்பள்ளியின் அருகாமையிலுள்ள சில குடைவரைக் கோயில்களையும், கங்கை கொண்ட சோழபுரத்தையும் இந்த ஐவர் குழுவுக்கு—அதாவது எங்களுக்குச் சுற்றிக் காண்பிப்பதாக இருந்ததால், மேற்படி ஏற்பாடு.
திருச்சியை நாங்கள் வந்தடைந்த பொழுது விடியற்காலை மணி இரண்டு. திருச்சியின் இரயில் நிலையத்திலிருந்து, ஆளற்ற தெருக்களில், காலை வீசிப்போட்டு நடந்து வந்து, பஸ்ஸ்டாண்டிற்கு அருகிலிருந்த ‘விஜய் லாட்ஜு’க்கு மூட்டை முடிச்சுகளுடன் வந்து சேர்ந்தோம். போட்டது போட்டபடியே படுக்கையில் விழுந்து விட்டு, பிறகு காலை ஐந்தரை மணிக்கு எழுந்து அரக்கப் பரக்க, தில்லை நகரை நாங்கள் அடைந்த பொழுது, ய்வு மையத்தின் டாக்டர். இரா. கலைக்கோவன், முனைவர் நளினி மற்றும் லலிதா மேடம் எங்களுக்காக ஒரு புன்னகையுடன் காத்துக்கொண்டிருந்தனர். அப்பொழுது காலை மணி எட்டு.
Posted at 09:47 pm by pavithra